Header Ads



எம்.பி. பதவியை ஏற்பதற்கு அமீர் அலி மறுப்பு..?

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வரின் நாடாளுமன்ற வெற்றிடத்துக்காக தம்மை நியமித்தமையை கிழக்கு மாகாணசபை சபை உறுப்பினர் அமீர் அலி ஏற்க மறுத்துள்ளார்.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு கொண்டிருக்கும் பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வெளியிட்டுள்ள நிலையில், தம்மால் குறித்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது என்று அமீர் அலி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே அமீர் அலி உட்பட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று பேர் கிழக்கு மாகாண அரசாங்கத்தில் இருந்து விலகி சுயமாக செயற்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையிலேயே அந்தக்கட்சியினரை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள ஏ.எச்.எம்.அஸ்வரை பதவி விலகக் கோரப்பட்டது. எனினும் இதற்கு இடையில் பொதுபலசேனா தாம் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது.

2 comments:

  1. சரியான. முடிவு எடுத்து இருக்கிறீர்கள் well done

    ReplyDelete
  2. ஹலோ! ஓபனாக சொல்லுங்க. பொதுபலசேனாவை கூண்டில் அடைத்துவிட்டு ஞானசாரருக்கு ஆயுள் சிறை வழங்கிவிட்டு உங்களோடு பேச வருமாறு. எமது முஸ்லிம் அரசியல்வாதிகளில் பலர் பனப் பித்தர்களே. சமுதாயம் எக்கேடு கெட்டாலும் மானம் மரியாதையை இழந்து ராஜபக்சவின் பின்னால் செல்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.