Header Ads



மைத்திரிபால சிறிசேனவுக்கு நான் ஒரு தவறும் செய்யவில்லை - பொலன்னறுவையில் மஹிந்த

-Tm-

முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தான் ஒரு தவறும் செய்யவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

பிரதியமைச்சர் சிறிபால கம்லத்தினால் சோமாவதியில் நிர்மாணிக்கப்பட்ட தர்மசாலையை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பொலன்னறுவை மாவட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், மைத்திரிபால சிறிசேன சென்ற வழியில் தாங்கள் செல்லப்போவதில்லை என்று ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர். 

No comments

Powered by Blogger.