Header Ads



மைத்திரிபால சிறிசேனாவை வெலிக்கடை சிறைக்கு அனுப்ப திட்டமிடுகிறார்கள் - சரத் பொன்சேகா

முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவையும் சிறையில் அடைக்கக் கூடும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மாற்றுக் கொள்கையாளர்களை பழிவாங்க முயற்சிக்கின்றது. மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு முற்று முழுதாக அகற்றிக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மைத்திரிபாலவுடன் குரோத உணர்வுடன் செயற்படுகின்றனர்.எவ்வாறு மைத்திரிபாலவிற்கு எதிராக வழக்குத் தொடர்வது என யோசிக்கின்றார்கள்.

எவ்வாறு வெலிக்கடை  சிறைச்சாலைக்கு அனுப்பி வைப்பது என்பது பற்றி திட்டமிடுகின்றார்கள். சில வேளைகளில் நான் சிறையில் தூங்கிய அதே மேசையில் மைத்திரிபாலவும் தூங்க நேரிடலாம்.

எனவே இப்போதே உடற்பயிற்சி செய்து உடலை தெம்படையச் செய்து கொள்வது நல்லது. ஆளும் கட்சியின் ஒரு தொகுதியினருக்கு இன்று புத்தி தெளிந்துள்ளது.

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒத்துழைப்பு வழங்கிய எனது சாதாரண தர வகுப்புத் தோழர் ராஜித, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோருக்கு நன்றி பாராட்டுகின்றேன்.

எவ்வாறெனினும் எமது கட்சியின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படக் கூடிய வகையிலான மேடைகளில் ஏறப் போவதில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹைட் மைதானத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. தமிழ்படம் போல ஆகிவிட்டது நாம் நாட்டு அரசியல். அல்லாஹ்தான் இவர்களிடம் எம் சமூகத்தை பாதுக்காக வேண்டும்

    ReplyDelete
  2. ஆட்சியில் இருப்பவர்கள் ஜனனாயத்தை மதிக்கவில்லையென்றால், சர்வாதிகாரப்போக்கை மேலும் கடைப்பிடிக்குமென்றால், நாட்டு மக்களை களத்தில் இறக்கி இவர்களது ஆட்சியைக்கவிழ்க்கவும் தயாராக உள்ளார்கள். இந்த முறை தேர்தல் கழம் படுமோசமானதோர் நிலையை அடைந்தே தீரும். முன்னெச்சரிக்கையுடன் நடக்கவேண்டியது எல்லோரினதும் தலையாய கடமை. இப்படியே அவர்கள் நினைத்தவர்களையெல்லாம் கைது செய்து கூட்டில் அடைப்பதுவும் நினைத்தவர்களை வெளியில் கொள்ள தின்ன விடுவதும். திருட்டுக்கும்பலிடம் ஆட்சியை கையளித்தார்களே இந்த மடையர்கள் கூட்டம். அதில பெளத்த நாடு பெளத நாடு என்று கோஸம் வேற. புத்தி கெட்டவங்களா.

    ReplyDelete

Powered by Blogger.