25 நாட்களில் 80 மில்லியன் ரூபாவை தேடிக்கொடுத்த யாழ் தேவி
யாழ்ப்பாணம் கொழும்பு தொடரூந்து போக்குவரத்தின் மூலம் கடந்த 25 நாட்களில் 80 மில்லியன் ரூபா வருமானமாக கிடைக்கப்பபெற்றுள்ளது.
இதன் மூலம் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தின் ஒரு நாள் வருமானம் ஒரு மில்லியனினால் அதிகரித்துள்ளது.
அத்துடன், மக்களின் கோரிக்கையின் போரில் யாழ்ப்பாணத்திற்கான புதிய தொடரூந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டையில் இருந்து முற்பகல் 10 மணிக்கும் இந்த தொடரூந்து தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

Post a Comment