Header Ads



புத்தளம் நகர சபையில் மீண்டும் முஹ்ஸி ரஹ்மத்துல்லாஹ்

2006-2010 காலப் பிரிவைத் தொடர்ந்து மீண்டும் அல்லாஹ்வின் ஏற்பாட்டில் புத்தளம் நகர சபைக்கு உறுப்பினராக செல்வதற்கான நியமனக் கடிதம் (17.10.2014) தேர்தல் செயலகத்தில் இருந்து கிடைத்தது.

புத்தளம் மன்பவு சாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரி அதிபரும்,அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா புத்தளம் மாவட்ட பிரதித் தலைவரும், புத்தளம் மாவட்ட சமாதான நீதவானுமாகிய அல்ஹாபிஸ் ஏ.எம்.எம்.ரியாஸ் ஹஸ்ரத் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்.

எனது மாமனாரும்,முன்னாள் சமூக சேவைகள் பிரதியமைச்சருமான அல்ஹாஜ் எஸ்.எஸ்.எம்.அபூபக்கர் அவர்களும் உடனிருக்கிறார்.

முதலில் அல்லாஹ்வுக்கு நன்றிகள். சுயேச்சைக் குழுவில் இருந்த வெற்றிடத்துக்கு என்னை நியமிக்க ஆர்வம் கொண்ட அல்ஹாஜ் எம்.ஏ.ஆர்.அலி சப்ரி மற்றும் அவரது நெருங்கிய செயற்பாட்டாளர்களுக்கும், உறுப்பினர் பதவியை ஏற்று, செயற்படுமாறு எனக்கு ஆலோசனை வழங்கிய,ஆதரவு தெரிவித்த, பெரிதும் வரவேற்ற, உற்சாகப்படுத்திய பல நூறு நல் உள்ளங்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்.

உங்கள் அனைவரது எதிர்ப்பார்ப்பும் ஒரு போதும் வீணாகாது. இன்ஷா அல்லாஹ். அர்ப்பணத்துடன் செயற்பட அல்லாஹ் அருள்பாளிப்பானாக..!



No comments

Powered by Blogger.