Header Ads



போரா சமூகத்தின் தலைவரை ஜனாதிபதி சந்தித்தார்


போரா முஸ்லிம் சமூகத்தின் உலக ஆன்மீகத் தலைவரான 53வது டாய் அல் முட்லக் - செய்ட்னா முப்ஃபாடல் சய்பூடீன் சாஹிப், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு அலரி மாளிகையில் 02-10-2014 இடம்பெற்றுள்ளது.

போரா முஸ்லிம் சமூகத்தின் இன்றைய ஆன்மீக தலைவரின் தந்தையான காலஞ்சென்ற அர்ஷத் ஹூசைன் சாஹேப் அவர்களின் இலங்கைக்கான இறுதி பயணம் மற்றும் அவர் நாட்டுக்கு வழங்கிய ஆசிர்வாதம் குறித்து ஜனாதிபதி இதன் போது நினைவுகூர்ந்துள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி தலைமையிலான இலங்கையின் துரித வளர்ச்சி மற்றும் பணிகளை ஆன்மீக தலைவர் பாராட்டியதாகவும் ஜனாதிபதியின் செயலகம் குறிப்பிட்டுள்ளது.



No comments

Powered by Blogger.