Header Ads



கன்னித்தன்மையை கடவுளுக்கு காணிக்கையாக்குமாறு கூறிய பாதிரியார் பலி..!

-Tm-

கன்னித்தன்மையை கடவுளுக்கு காணிக்கையாக்குமாறு கூறி மாணவிகள் இருவரை ஏமாற்றி, அவர்களை பாலியல் துஷ்பிரயோகபடுத்தியமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பாதிரியார், இன்று(19) அதிகாலை உயிரிழந்ததாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

மாதம்பை இலஹமையைச்சேர்ந்த தனுஷ்க நீலகாந்த (வயது30) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பாதிரியார் காக்கப்பள்ளி பம்மல பிரதேசத்தில் நற்செய்தி நிலையமொன்றை நடாத்தி வந்துள்ளார்.

அங்கு கல்வி பயில சென்ற மாணவிகள் இருவரிடம், கன்னித்தன்மையை கடவுளுக்கு காணிக்கையாக்குமாறு கோரிய பாதிரியார், அவர்களை பலமுறை துஷ்பிரயோகப்படுத்தியுள்ளார்.

இவ்விடயத்தை மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் சிலாபம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த போது, சந்தேகநபரான பாதிரியார் தலைமறைவாகியிருந்தார்.

பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் மாதம்பை பகுதியில் மறைந்திருந்த அவர் கடந்த 15 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட வேளை வாந்தியெடுத்து மயங்கி விழுந்ததால் அவர், சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

இவர் விஷம் அருந்தியிருக்கலாம் என தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

இம்மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை சிலாபம் வைத்தியசாலையில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 comment:

  1. சிலருக்கு வாழ்க்கை என்னவென்றே புரியவில்லை. இறைவன் எல்லாவற்றையும் உனக்காகத்தான் படைத்தான். நீ வெளிப்படையாக இல்லையென்று சொல்கின்றாய் இருப்பினும் உனது மனது அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. எது உண்மையோ அதுதான் உண்மையாக இருக்க முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.