Header Ads



சந்தர்ப்பவாதக் கட்சிகளுடன் அல்லாமல், முஸ்லிம் மக்களுடன் நாம் பேசிவருகின்றோம் - ரவி கருணாநாயக்க

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸூடன்  ஐ.தே.க. பேச்சுவார்த்தை நடத்த  திட்டமிட்டுள்ளதா என ஐ.தே.கவின் உப தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்கவிடம் வாரப் பத்திரிகையொன்று கேட்ட கேள்விக்கு அவர் கீழ்வருமாறு பதில் வழங்கியுள்ளார்

பதில்: சந்தர்ப்பவாதக் கட்சிகளுடன் அல்லாமல் முஸ்லிம் மக்களுடன் நாம் பேசிவருகின்றோம். அந்த மக்களுக்கு இந்த நாட்டில் அநீதிகள் நடந்தபோதெல்லாம் அரசிலுள்ள முஸ்லிம் கட்சிகள் ஒன்றும் செய்யவில்லை. எதிர்க்கட்சி என்ற வகையில் எம்மிடமே முறையிட்டனர். எனவே, அந்த மக்களை காக்க வேண்டியது  ஐ.தே.க.வின் பொறுப்பாகும். எமது மக்களை நாமே காக்கவேண்டும் என்று முஸ்லிம் கட்சிகள் கருதினால் எம்முடன் ஒன்று சேரலாம். ஜனாதிபதித் தேர்தல் என்பதை விட மக்கள் நலன் சார்ந்து முடிவெடுக்குமாறு அவர்களிடம் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments

Powered by Blogger.