ஐக்கிய தேசிய கட்சிக்கு சரத் பொன்சேக்காவின் ஆதரவு..??
நாட்டின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பிரதான விடயங்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என ஜனநாயகக் கட்சியின் தலைவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவதா, நேர்மையான பொது வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை ஆதரிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்பதா என்பனவே இந்த மூன்று விடயங்கள் என பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
ராஜகிரிய மெட்டி அம்பலம பகுதியில் உள்ள ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த விடயங்கள் எது பற்றியும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கட்சியினருடன் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க என்னை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து தேர்தலில் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கை குறித்து சுமூகமாக அவருடன் பேச தயாராக இருப்பதாக நான் கூறியுள்ளேன் என்றார்.

பகிரங்கமாகச்சொல்கின்றோம். இவ்வளவு கொடுமைகளை செய்கின்ற அரசாங்கத்தை எதிர்த்து இம்முறை ஏதோ ஒரு கட்டி வெற்றியீட்டும் நிலைப்பாட்டில் உள்ளதை மக்கள் ஊவா தேர்தல் மூலம் எடுத்துச் சொல்லி உள்ளார்கள். அதை சரியாக பயன் படுத்தி இக்காட்டு மிராண்டிகளை வீட்டுக்கு அனுப்ப ஐ. தே. கட்சி நல்லதோர் தலைமையை தேர்வு செய்து கழத்தில் இறக்கினால் மக்களின் ஆதரவு 65 வீதம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
ReplyDelete