Header Ads



ஹஜ் முடித்துவிட்டு திரும்பிய இலங்கையருக்கு நெஞ்சுவலி - ஜித்தாவில் விமானம் தரையிறக்கம்

(Sfm)

ஹஜ் யாத்திரைக்கு சென்றிருந்த இலங்கையர் ஒருவர் இயற்கை மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து அவரின் ஜனாஸா மதினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக அரப் நியூஷ் தகவல் வெளியிட்டுள்ளது

இதேவேளை ஹஜ் யாத்திரையை முடித்தபின்னர் இலங்கைக்கு திரும்பிய ஒருவருக்கு வானூர்தியில் வைத்து ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக வானூர்தி அவசரமாக தரையிறக்கப்பட்டு குறித்த இலங்கையர் ஜெட்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்தநிலையில் குறித்த இலங்கையர் இரண்டு நாட்களுக்குள் வைத்தியசாலையில் இருந்து வீடுசெல்ல அனுமதிக்கப்படுவார் என்று  சவூதி தகவல்கள் தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.