Header Ads



5 வருட காலப்பகுதியில் 10 லட்சம் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவேன் - ரணில்

5 வருட காலப்பகுதியில் 10 லட்சம் தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதே ஐக்கிய தேசிய கட்சியின் இலக்கு என அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதுதவிர, பொதுமக்களின் வருமான நிலைமையை மேம்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச நிதி நிறுவனத்தின் பங்களிப்புடன் கடந்த காலங்களில் செயற்படுத்தப்பட்டு வந்த வேலைத்திட்டங்கள் சாதகமாக அமையவில்லை எனவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சி தொகுதி அமைப்பாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.

No comments

Powered by Blogger.