Header Ads



ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார், மஹிந்தவை கவிழ்க்க சகல ஆயுதங்களையும் தயார்படுத்துறோம்

GTN

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப்போட்டியிடும் சவாலை எதிர்கொள்ள தயார் என ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார். எனது கட்சியோ அல்லது மக்களோ இதற்கான அழைப்பை விடுத்தால் அதனை ஏற்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார், என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஆட்சியாளரையும் 18 வருடங்கள் தொடர்ந்து ஆட்சிபுரிவதற்க்கு அனுமதிக்க கூடாது, ராஜபக்சவிற்க்கும் இதற்கான அனுமதியை வழங்க கூடாது, நாட்டை ஆள்வதற்க்கும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்க்கும் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தவும ;ஒரு ஆட்சியாளருக்கு 12 வருடங்கள் போதும்.

இதன்காரணமாக அடுத்த தேர்தலில் அவரை கவிழ்பதற்கான அனைத்து ஆயுதங்களையும் தயார் படுத்துகின்றோம். பொதுவேட்பாளர் குறித்த பேச்சுக்கள் இன்னமும் தொடர்கின்றன, அது இன்னமும் முடிந்துவிடவில்லை, அதனை சாத்தியமாக்குவதற்காக எங்களது தரப்பிலிருந்து சாத்தியமான அனைத்தையும் செய்கின்றோம்.என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.