Header Ads



தென்கிழக்காசியாவை இந்து - பௌத்த தேசம் என்று அழைக்கவேண்டும் - பொதுபல சேனா மேடையில் தமிழர்

-TM-

கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும்  நாடுகளை ஒன்றிணைத்து ஜரோப்பிய தேசம் என்றும் முஸ்லிம் நாடுகளை ஒன்றிணைத்து அரபு தேசம் என்று அழைப்பதனை போல இந்து, பௌத்தர்கள் அதிகமாக வாழும் தென்கிழக்காசியாவை இந்து - பௌத்த தேசம் என்று அழைக்கவேண்டும் என ஸ்ரீலங்கா இந்து சம்மேளனத்தின் தலைவர் என். அருண்காந்த் தெரிவித்தார்.

சுகததாச உள்ளக அரங்கில் ஞாயிற்றுக்கிழமை(28) இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் தேசிய மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.

கடந்த காலங்களில் தமிழ் சமூகம் குறிப்பாக இலங்கையில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர் மொகலாய சக்கரவர்த்திகளாலும் மேற்கத்தேயவாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டபோது, இலட்சக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதுடன் மதமாற்றமும் செய்யப்பட்டனர். காலம் கடந்துள்ளபோதும்  எமக்கெதிரான இந்த சவால்கள் மாறவில்லை.

ஒரே ஒரு கேள்வியைதான் கேட்க விரும்புகிறேன். பௌத்தமும் இந்து மதமும் ஒரே மண்ணிலிருந்து தோன்றின. பாரதத்தில் இருந்துதான் தோன்றின. இப்படியாக ஒரே தேசத்தில் இருந்து தோன்றியவர்கள் இன்று ஒருவரை ஒருவர் வெறுக்கின்றோம். ஆனால் அந்நிய தேசத்திலிருந்து அறிமுகப்படுத்திய கலாச்சாரத்தை ஞாபகத்தில் வைத்துள்ளோம். எனவே எமது நாட்டிலுள்ள இந்துக்கள் எம்மை ஆதரித்து ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள்.

கிழக்கு மாகாணத்தில் காரைத்தீவு விபுலானந்த சதுக்கத்திலே முஸ்லிம் பள்ளிவாசல் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஒல்லாந்தர் காலத்திலே தரைமட்டமாக்கப்பட்ட அம்மன் ஆலயம் இன்று மடு மாதா தேவாலயமாக மாற்றப்பட்டுள்ளது.

தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, மடு மாதா ஆலயத்தை மீட்டு மீண்டும் இந்துக்களிடம் ஒப்படைப்பாரா என்பதை கேட்க விரும்புகின்றேன். ஓவ்வொரு மாவட்டத்தையும் தனித்தனி மறைமாவட்டங்களாக மாற்றிய இராயப்பு ஜோசப் ஆண்டகை, மதமாற்றம் செய்வதை கைவிடுவாரா என்றும் கேட்கிறேன்.

இந்துக்களுக்கு எதிராக செயற்படும் எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும் அரசியல் தலைவர்களாக இருந்தாலும் அவர்களை எதிர்த்து எமது தொண்டர்கள் பிரசாரம் செய்வார்கள் என்பதை நான் கூறிக்கொள்கின்றேன்.

எப்படி கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும்  நாடுகளை கூட்டாக ஒன்றிணைத்து ஜரோப்பிய தேசம் என்று அழைக்கப்படுகின்றதோ, முஸ்லிம் நாடுகளை ஒன்றினைத்து அரபு தேசம் என்று அழைக்கப்படுகின்றதோ அதனை போல, இந்து, பௌத்தர்கள் அதிகமாக வாழும் தென்கிழக்காசியாவை இந்து - பௌத்த தேசம் என்று அழைக்கவேண்டும் என நான் முன்மொழிகின்றேன் என்றார்.

3 comments:

  1. இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண் காந்த இந்துக்களால் விரட்டியடிக்கப்பட்டவர் என நினைக்கின்றேன். பொது பலசேன தனது வருவாயில் ஒரு பகுதியை இவருக்கு கொடுத்துள்ளது இவரின் வார்த்தைகளிலே புலப்படுகின்றது. இவருக்கு விளக்கம் அழிக்கவேண்டியவர்கள் இந்துக்களே தவிர முஸ்லிம்கள் அல்ல.
    இதுபோன்ற காழான்கள் அடிக்கடி முளைக்கும் காணமல் போகும் இவையொன்றும் கணக்கில் எடுக்கக்கூடியளவிற்கு இல்லை. கிடைக்கும் பணம் நின்றால் பொது பலசேன விற்கே இவர் மாறி நின்று பேசுவார்.

    ReplyDelete
  2. மேலாதிக்க புத்தியுள்ளவர்கள் சிறுபான்மை மக்களிடையேயும் இருக்கின்றார்கள் என்பதற்கு இவர் தான் உதாரணம்.

    பிராமணர்களின் மேலாதிக்கத்தை சாடும் திராவிடர்களிடையே கூட மேலாதிக்க நச்சு உள்ளது. ஆண்களின் மேலாதிக்கத்தை விமர்சிக்கும் பெண்களிடம் கூட அடிமைப்புத்தியுள்ளது. தமது மதத்தை 'அமைதி வழி' என்று பிதற்றிக்கொண்டே பிற மதத்தவர்களை கொன்றொழிக்கத் துடிக்கும் 'நல்லடியார்கள்' நம்மிடையே கூட உள்ளனர்.

    ஒருவன் அல்லது ஒருத்தி அறவுணர்வோடு வாழ்வதற்கு விரும்பினால் மட்டுமே சரியான பாதையில் சிந்திக்கவும் அதன்வழி நடக்கவும் முடியுமே தவிர, அவன் எந்த இனத்தைச் சேர்ந்தவன் / எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்பதிலெல்லாம் அது தங்கியிருப்பதில்லை!

    ReplyDelete
  3. Jessly.

    அது சரி நீங்க எந்த மதம் என்று சொன்னால் மற்றவர்களுக்கும் புரியும் ஏனென்றால் அமைதி வழி என்று பிதற்றுவதாக நிறையப்பேர் உங்களுடன் உள்ளார்கள் போலுள்ளது. ஏனென்றால் உங்கள் கருத்துக்களின்படி கண்டிப்பாக நீர் ஒரு முஸ்லிம் அல்ல என்பது புரிகின்றது. பின்பு ஏன் இப்படி ஒரு இரட்டைவேடம்.
    எங்கேயாவது எதையாவது கொப்பி செய்து இங்கு கொண்டுவந்து பேஸ்ட் பண்ணும்போது அது எல்லாவற்றுக்கும் பொருதமா என்று கவனிக்கவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.