Header Ads



மாளிகாவத்தை மத்ரஸதுல் மல்கரிஸ் சுல்கிய்யாவின் கட்டிடத் திறப்பு விழா

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)   

மாளிகாவத்தை மத்ரஸதுல் மல்கரிஸ் சுல்கிய்யாவின் இரண்டாவது மாடிக் கட்டிடத் திறப்பு விழா கடந்த சனிக்கிழமை (27) மத்ரஸாவின் தலைவர் மௌலவி றிஸ்வி தலைமையில் இடம் பெற்றது.

மேற்படி நிகழ்விற்கு பிரதம அதிதியாக மத்ரஸாவின் கட்டிடத்திற்கு நிதி அன்பளிப்புச் செய்த தேசமான்ய மாஜிட் அவுன் கலந்து கொண்டு கட்டிடத்தின் திரையை நீக்கி திறந்து வைத்தார். மேற்படி நிகழ்விற்கு விஷேட அதிதிகளாக தேசமான்ய ஜவ்ஹருள் அமல் ஏ.எம்.எம்.நிஸார், மினன் பள்ளி வாசல் நிருவாகி மௌலவி துவான் ஜெலிஸ் ஆகியோரும் மத்ரஸாவின் செயலாளர் இம்தியாஸ், உப செயலாளர் ஹில்மி, மௌலவி ஹூஸைன் மவ்சூம், சிரேஷ்ட அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான றஷீட் எம் ஹபீழ் உட்பட பல பிரமுகர்களும், மத்ரசா மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது கொடை வள்ளலின் சேவையைப் பாராட்டி  தேசமான்ய மாஜிட் அவுனுக்கு நினைவுச் சின்னம் வழங்கியும் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டதுடுன் தேசமான்ய ஜவ்ஹருள் அமல் ஏ.எம்.எம்.நிஸார், மினன் பள்ளி வாசல் நிருவாகி மௌலவி துவான் ஜெலிஸ் ஆகியோரது சேவைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.