Header Ads



வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸார் தோல்வி

மொனராகலை பிரதேசத்தில் இடம்பெரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸார் தோல்வியடைந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 

இன்று 13-09-2014 அதிகாலை மக்கள் விடுதலை முன்னணி அலுவலகங்கள் சில தாக்கப்பட்டுள்ளதாக இந்த அமைப்பு கூறியுள்ளது. 

மேலும் ஊவா மாகாண தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 42 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 

மொனராகலை பொலிஸ் பிரிவில் 21 பேரும், பண்டாரவளை பொலிஸ் பிரிவில் 14 பேரும், பதுளை பொலிஸ் பிரிவில் ஐவரும் இவ்வாறு கைதாகியுள்ளதோடு, தங்காலை பொலிஸ் பிரிவில் இருவரும் கைதாகியுள்ளனர். 

No comments

Powered by Blogger.