Header Ads



ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. கைது

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டரா கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம், கருவலகஸ்வெவ பொலிஸாரினால் அவர் இன்று 28-09-2014 கைது செய்யப்பட்டுள்ளார்.

கருவலகஸ்வெவ பிரதேச சபையின் தலைவர் நீல் வீரசிங்க மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.