தாயாரால் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் ஜனாஸா நல்லடக்கம் (படங்கள்)
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
தாயாரால் கொலை செய்யப்பட்ட சிறுமி சக்கியாவின் ஜனாஸா இன்று 01-09-2014 இரவு (01) நல்லடக்கம் செய்யப்படது.
கொலன்னாவை நாகமுள்ளயில் வசித்து வந்த பாத்திமா சக்கியா (06) என்பவர் நேற்று 31ஆம் திகதி தாயாரால் அடிக்கப்பட்டபோது மயக்கமடைந்த நிலையில் சீமாட்டி சிறுவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமானானார்.
வாழைத் தோட்டம் மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆப்பள்ளியில் ஜனாஸாத் தொழுகை இடம்பெற்ற பின்னர் இன்று இரவு குப்பியாவத்தை மையவாடிக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேற்படி சிறுமியின் ஜனாஸா வாழைத் தோட்டத்தில் உள்ள அவரது பாட்டனாhர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டபோது இனமத பேதமின்றி வாழைதோட்டமே மக்களால் நிரம்பி வழிந்தததைக் காணக் கூடியதாக இருந்ததுடன் அவரது அகால மரணம் அனைவரையுமே கண்ணீர் சிந்தி கவலை கொள்ளச் செய்ததையும் காணக் கூடியதாக இருந்ததது.
அவருக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்வான சுவர்க்கத்தைக் கொடுப்பானாக (ஆமீன்)
Post a Comment