Header Ads



மஹேல ஜயவர்தனாவும், குமார் சங்­கக்­காரவும் ஐஸ் தண்ணீரில் குளிப்பார்களா..?


ஒடெல் நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஒடாரா குணவர்தன  இலங்கை கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்டசத்திரங்களும் ஜாம்வான்களுமான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்­கக்­காரவுக்கு ஐஸ் பக்கட் சவால் விடுக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு தொடர்பான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நிதி திரட்டவும் 'ஐஸ் பக்கெட் சவால்" அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சவாலை உலக பிரபலங்களில் பலர் ஏற்று தங்கள் தலையில் ஒரு பக்கெட் குளிர்ந்த நீரை ஊற்றியுள்ளனர். மேலும் இந்த சவாலை ஏற்கும் ஒவ்வொருவரும் 3 பேரை கைகாட்டி அவர்களை இந்த சவாலை ஏற்குமாறு கூற வேண்டும். அப்படி 24 மணித்தியாலத்துக்குள் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்க மறுக்கும் நபர்கள் அறக்கட்டளைக்கு 100 டொலர்களை செலுத்த வேண்டும். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இலங்கையின் இசையமைப்பாளரும் பாடகருமான இராஜ் வீரரட்னவினால் ஒடெல் நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஒடாரா குணவர்தனவுக்கு ஐஸ் பக்கெட் சவால் விடுக்கப்பட்டது. ஐஸ் பக்கெட் சவாலை 24 மணித்தியாலத்துக்குள் நிறைவேற்றிய ஒடாரா குணவர்தன சங்கக்கார மஹேல ஜயவர்தன மற்றும் சமிரா ரெட்டி ஆகியோருக்கு ஐஸ் பக்கெட் சவால் விடுத்துள்ளார்.


No comments

Powered by Blogger.