அவுஸ்ரேலிய சிட்னி நதியிலிருந்து இலங்கை பெண்ணின் உடல் மீட்பு
(Gtn)
அவுஸ்ரேலிய மேற்கு சிட்னி நதியிலிருந்து மீட்கப்பட்ட இலங்கை இலங்கையை பெண்ணின் உடல் குறித்து விசாரணை ஆரம்பம்:-
மேற்கு சிட்னியில் சிறிய நதிப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரின் உடல் தொடர்பாக அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பிட்டபெண்ணிண் சகோரர் ஒருவரே சிறிய நதிப் பகுதியிலிருந்து அவரது உடலை மீட்டுள்ளதாக டெய்லி டெலிகிராப் தெரிவித்துள்ளது மேற்கு சிட்னியில் தனது சகோதரனுடன் வசித்து வந்த அமேசா ராஜபக்ச என்பவரே இவ்வாறு மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரது உடல்; கழுத்தை சுற்றி தலைப்பட்டியுடன் மீட்கப்பட்டுள்ளது.
2009 ம் ஆண்டு இலங்கையிலிருந்து சென்ற அமேசா ஓரு கணணி பட்டதாரி என தெரிவித்துள்ள பொலிஸார், அவர் திருமணமாகதவர் எனவும் அவரது மரணத்தில் ஏதாவது சந்தேகமிருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக மரணவிசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment