பாராளுமன்றத்தில் பலஸ்தீனர்களுக்காக பிரேணை கொண்டுவந்த அஸ்வர்
பலஸ்தீனர்களின் உரிமைகளுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவும் அவரது தலைமையிலான அரசாங்கமும் இன்றும் துணிச்சலுடன் குரல் கொடுத்து வருவதோடு பலஸ்தீனர்களுக்கான முழு ஆதரவையும் வழங்கி வருவதாக ஆளுந்தரப்பு எம்.பி.ஏ.எச்.எம். அஸ்வர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எமது நாட்டுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் ஐ.நா.இஸ்ரேலியர்கள் பலஸ்தீனத்தில் மேற்கொள்ளும் மனிதச் சங்காரத்தைப் பார்த்துக் கொண்டு மௌனித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பலஸ்தீன பிரச்சினை தொடர்பாக சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே அஸ்வர் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்து உரையாற்றிய அஸ்வர் எம்.பி. இஸ்ரேல் பலஸ்தீனத்தின் மீது கொடூரமான காட்டுமிராண்டித் தாக்குதல்களை நடத்தி அட்டூழியங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அம்மக்களின் நிலங்கள் பலாத்காரமாக ஆக்கிரமிக்கப்படுகின்றது.
நான் இங்கு பேசிக் கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்திலும் பலஸ்தீனத்தில் சிறுபிள்ளைகள் மீது காட்டுமிராண்டித்தனமாக இஸ்ரேல் குண்டு மழை பொழிகின்றது.தினம் தினம் அப்பாவிப் பொது மக்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
பலஸ்தீனம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அஸ்மா மிஹ் ராஜ் எனும் விண்ணுலக யாத்திரை சென்ற புனித பூமி.முஸ்லிம்களின் புனித அல் – அக் ஷாவும் இங்கேயே உள்ளது. இதன் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
ஆனால் உலகில் 57 முஸ்லிம் நாடுகள் உள்ளன. அது மட்டுமல்லாது உலக இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு உள்ளது. இவையனைத்தும் பலஸ்தீனர்களுக்காக என்ன செய்கிறது. அமெரிக்காவின் அடிவருடிகளாக செயல்படுவோர் இன்று மௌனித்து விட்டார்கள். அவர்கள் வாய் திறப்பதில்லை.
இலங்கையில் மனித உரிமைகள் , யுத்தக்குற்றச்சாட்டுக்கள் சர்வதேச விசாரணைகள் எனகோரும் ஐ.நா. இஸ்ரேலின் பலஸ்தீனர்கள் மீது நடத்தும் காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்களை கண்டும் காணாமல் உள்ளது.
இந்த மனித சங்காரத்திற்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் . இஸ்ரேலின் அட்டூழியங்கள் நிறுத்தப்பட வேண்டும்.எமது ஜனாதிபதி பலஸ்தீனத்தின் நண்பர். அந்நாட்டு ஜனாதிபதி மொஹமட் அப்பாஸை தொடர்பு கொண்டு தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விசாரித்துள்ளார். பலஸ்தீனர்களுக்கான ஆதரவு தொடரும் என்றும் அஸ்வர் எம்.பி. தெரிவித்தார்.
இவ் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போது அவர் உணர்ச்சி வசப்பட்டிருப்பதையும் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தமையையும் காண முடிந்தது. அத்தோடு நோன்பையும் சபைக்குள்ளேயே தண்ணீரை அருந்தி முடித்து வைத்தார்.
அளுத்கம முஸ்லிம்கலை அடிக்கும் போதும் கொள்ளும் போதும் பள்ளிவாசல்களை உடைக்கும் போதும் நீ என்ன செய்தாய் இப்ப முதலைக்கண்ணீர் வடிக்கிறாய்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ்காக இந்த முட்டாலின் செய்திகளை போட வேண்டாம். தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDelete