Header Ads



அளுத்கமயில் பௌத்த பிக்கு தற்கொலை

அளுத்கம, மொரகல்ல தம்மிக்காராமய விஹாரையில் இருந்த 19 வயதான பௌத்த பிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் இன்று 20-07-2014 அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தம்மிக்க ராம விகாரையில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக பேருவல, வலபன பரமர நியாராம விகாரையில் இருந்து சென்ற பிக்கு ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தனது வாழ்க்கை வெறுத்து விட்டதாகவும் தனது பெற்றோரை கவனித்து கொள்ளுமாறும் குறித்த பிக்கு இறுதியாக எழுதி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.