Header Ads



அளுத்கம நோக்கி சென்ற சமாதான யாத்திரைக்கு பிக்குகள் எதிர்ப்பு

ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தலைமையில் நடத்தப்பட்ட  சமாதான யாத்திரையை பொலிஸார்  தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அளுத்கம, பேருவளை, தர்கா நகர் நோக்கி சென்ற சமாதான யாத்திரையே பொலிஸாரால் இன்று 26-07-2014 தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பிரதேசத்தை சேர்ந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சிலர் சமாதான யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மோதல் ஏற்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிதுங்க ஜயசூரிய தலைமையிலான குழுவினர் கொழும்பு நாராஹேன்பிட்டியில் இருந்து வஸ்கடுவ வரை சென்றிருந்தனர்.

அங்கு மோதல் ஒன்று ஏற்பட்டதாகவும் தாம் அதனை தடுத்து நிறுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.