Header Ads



அண்ணா ஞானே, சூடானாக மாற்று..!


(நாகூர் ழரீஃப்)

அண்ணா ஞானே!
இலங்கைத் திரு நாட்டை
சூடானாக மாற்றப் போவதாக
சூழுரைத்துள்ளீர்கள்.
அதுதான் இப்பொழுது
நடக்கவும் போகிறது.

அப்படி மாற்றினால
உங்கள் அணியில்
நாமும் கண்டிப்பாக 
இணைவோம்!
ஏன் தெரியுமா?
சூடான் நாட்டில்
96.7  சதவீதமுஸ்லிம்கள்
அங்கு வாழ்கிறார்கள்!

அல்லாஹ் மாத்திரம்
எல்லாவற்றிற்கும்
இறைவன் என்ற 
ஏகத்துவத்துடன்
வாழும் மக்கள்
தேசமாக
எம் தேசத்தையும்
அவசரமாக மாற்றுங்கள்!

முழு மனித சமூகத்தின்
அறியாமை போக்கி,
அநீதி அகற்றி,
அடிமைத்துவத்துக்கு
சாவு மணி அடித்த –
மனிதம் வாழச் செய்த
மாநபியின் வாழ்வியலை
ஏற்றவர்கள்
அங்கு வாழ்கிறார்கள்
எனவே சூடானாக மாற்று!

அத்தேச மக்கள்
பண்பாட்டு நாகரிகம்
கொண்டவர்கள்!
மனிதம் வாழ துடிப்பவர்கள்!
பிறர் உரிமையில்
சமயத்தில் தலைபோடாத
சன்மார்க்க சீலர்கள் -
எனவே சூடானாக மாற்று!

அத்தேச மக்களின்
நிறம் உண்மையில்
கருப்பத்தான் - ஆனால்
அவர்களது உள்ளங்களில்
உனது உள்ளத்தில் படிந்துள்ள
கசடுகளும்
கருப்புச் சாயங்களும் இல்லை
எனவே சூடானாக மாற்று!!

No comments

Powered by Blogger.