Header Ads



கல்முனை பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டச்சுற்றுப் போட்டி


(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக் கிடையிலான உதைபந்தாட்டச்சுற்றுப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக்கழகம் இவ்வருட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 8 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்ற இவ் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக் கிழமை ( 20 ) கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போது கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக்கழகத்தை எதிர் கொண்ட மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் 1 - 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.

கல்முனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும் , கல்முனை பிரதேச செயலக கணக்காளர் எம்.எம்.எம்.ஹுசைன்தீன் கௌரவ அதிதியாகவும் , அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட பயிற்சியாளர் எம்.ஐ.அமீர் அலி விசேட அதிதியாகவும் கலந்து கொண்டதுடன் போட்டிக்கான சகல ஏற்பாடுகளையும் கல்முனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோஸ்தர் ஏ.எம்.றஸீன் மேற்கொண்டிருந்தார்.





No comments

Powered by Blogger.