Header Ads



அரசாங்கத்தை உருவாக்கவும், கவிழ்க்கவும் எமக்கு சக்தியுள்ளது - ஞானசார தேரர்

அரசாங்கத்தை உருவாக்கவும், கவிழ்க்கவும் முடியும் என பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் கவிழ்ப்பதற்கும் தமது இயக்கத்திற்கு சக்தியிருப்பதாக பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை கவிழ்க்கும் உத்தேசம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக தமது இயக்கம் சூழ்ச்சி செய்வதாக சில அமைச்சர்கள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்கம் பற்றி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கருத்து வெளியிடும் போதிலும், அவரது மனைவி ஜெனீவா சென்று நாட்டில் ஐக்கியமில்லை என தெரிவிப்பதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. பிரச்சினைகள் அதிகமாகின்றபோதும், மக்கள் அரசாங்கத்தை குற்றம் சொல்லும் போதும்,

    அதாவது பொதுபலசேனவை அரசாங்கம்தான் வைத்து செயற்படுத்துகின்றது என்பதை மக்கள் உரத்துச் சொல்லும் நேரம் இப்படி ஒரு செய்தியையும் அரசாங்கமே பொதுபலசேன ஊடாக வெளியிடுகின்றது இதனால் அரசாங்கத்தின் மேல் மக்களுக்கு உள்ள சந்தேகம் குறைகின்றது.

    இதுவும் அரசியல் தந்திரமாக இருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.