கல்முனைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
(ஏ.பி.எம்.அஸ்ஹர் யூ.எம்.இஸ்ஹாக்)
கல்முனைப்பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று 2014.04.23 இடம்பெற்றது.
கல்முனைப்பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனைப்பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஜ.எம்.ஹனீபா கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன் பிரதிப்பனிப்பாளர் ரீ.மோகனகுமார் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் திணைக்களத்தலைவர்கள் உட்பட அரச உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு பல் வேறு அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் பல முக்கியமான தீர்மாணங்களும் எடுக்கப்பட்டன.அத்துடன் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்திட்டங்களுக்கான அனுமதியும் இங்கு வழங்கப்பட்டது
Post a Comment