Header Ads



பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரில் 7 ஏழு கிளைகளுடன் மிக சிறப்பாக இயங்கிவரும் பிஸ்மி        அல் குர் ஆன் பாடசாலையின் 4 நான்காவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 27-04-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.ஆர்.எம்.அஸ்ஹர் நளீமி தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக எங்கள் தேசம் பத்திரிகை மற்றும் பிறபோதய சஞ்சிகை ஆகியவற்றின் பிரதம ஆசிரியர் எம்.எச்.எம்.ஹஸன் கலந்து கொண்டார்

இதன் போது பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளினால்  பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலை 100 மாணவ மாணவிகள் பதக்கமும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு மட்டுமன்றி மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் அதிதிகளினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி, கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக உதவிச் செயலாளர் ஏ.ரி.எம்.ராபி ,விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைரூஸ்,முன்னாள் காழி நீதிபதி எம்.எம்.எம்.மஃறூப் கரீம்,காத்தான்குடி தள வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர், காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கவிமனி மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி),ஏ.ஜி.எம். பிரதர்ஸ் உரிமையாளர் ஏ.ஜே.எம்.ஹாரூன்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஆசிரியர் பிர்தௌஸ் ,பொறியியலாளர் எம்.ஏ.சி.எம்.ஜெஸீம், மற்றும் உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள் ,பெற்றோர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலை மாணவ மாணவிகளில் ஆற்றல்களை வெளிக்கொணரும் தேசிய கீதம்,ஹதீஸ் போட்டி,உரையாடல்,கஸீதா,அல் குர் ஆன் முரத்தல்,தஜ்வீத் மாநாடு,மஃதூராத் நாடகம்  போன்ற பல்வேறு விதமான இஸ்லாமிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.