Header Ads



சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் பழுதடைந்த பஸ்ஸை திருத்துவது யார்..?


(யு .எல்.எம். றியாஸ்)

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் மிக நீண்ட காலமாக
பழுதடைந்த நிலையில் காணப்படும் இப் பாடசாலைக்கு சொந்தமான பஸ் வண்டி எதுவித கவனிப்புமின்றி துருப்பிடுத்து பாவனைக்கு உதவாத நிலைக்கு
வந்துள்ளது

இவ் பஸ்வண்டி தற்போது தெரு நாய்களின் பிரதான உறைவிடமாகவும்மர்ரும் ஏனைய விஸ  ஜந்துக்களின் வாழ்விடமாகவும் காணப்பட்டு வருகின்றது இதனால் இப்பாடசாலை மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர்

பலமுறை அதிபர் உட்பட பாடசாலை நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என இப்பாடசாலை நலன் விரும்பிகள் தமது ஆதங்கத்தை தெரிவித்தனர்

இதேவேளை இவ் பஸ்வண்டியை பாடசாலை முகப்புப் பகுதியில் நிறுத்தி
வைத்திருப்பதால் பாடசாலைக்குசமூகம் கொடுக்கும் சகலரும் இதை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது இது விடயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா ?



No comments

Powered by Blogger.