இலங்கையில் மத ரீதியான மோதல்கள் எதுவுமில்லை - பஹ்ரைனில் முழங்கிய மஹிந்த
இலங்கையில் மத முரண்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் மத ரீதியான மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. அவ்வாறு மத முரண்பாடுகள் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது.
நீண்ட இடைவெளியின் பின்னர் பஹ்ரெய்னுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிட்டியமை மகிழ்ச்சியளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பஹ்ரெய்ன் வாழ் இலங்கை மக்களைச் சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இந்த விஜயத்தின் போது அமைச்சர் றிசாத் பதியுதீனும் உடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரிசாத் அவர்களுக்கு அரபி மொழி தெரியாது போல விடுங்க பாஸ் இதல்லாம் அரசியலில் சாதாரணம்
ReplyDeleteReshad went to bahrain for shoping with MR , so no problem for minority in SLK., what a shame on you reshad.
ReplyDeleteஇதுபோன்ற செய்திகள் பிரசுரிக்கும்போது இச்செய்திகள் எங்கிருந்து கிடைக்கப்பெற்றன எனும் முழுவிபரத்தையும் இணைப்பது. ஜப்னா முஸ்லிம் இணையப்பத்திரிகைக்கு இன்னும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்றெண்ணுகின்றோம். ஏனென்றால் முஸ்லிம்களுக்கு எதுவித துரோகமும் இலங்கையில் நடக்காது என்று கூட ஜனாதிபதி சொல்லத்தயங்கமாட்டார், அவர் இதுபோன்ற பேச்சுக்கள் பலவற்றை பேசிவிட்டார். ஆனால் ரிசாட் அவர்களும் பக்கத்தில் உள்ளார் அல்லவா அதனால்தான். பேசிய வீடியோவுடன் செய்தி இருக்குமானால் இன்னும் சிறப்பு. அத்துடன் தலைவர் ரிசாட்டிடம் கேட்பத்ற்கும் இலகுவாக இருக்கும்.
ReplyDelete