Header Ads



3 மாதங்களில் 4 கோடி பயணிகள்: துபாய் மெட்ரோ ரெயில் சாதனை

துபாய் மெட்ரோ ரெயில் சேவை 2014-ம் ஆண்டு பிறந்த மூன்றே மாதங்களில் 4 கோடிக்கும் அதிகமான பயணிகளை கையாண்டு மகத்தான சாதனை புரிந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் பயணித்தவர்களை விட இது 70 லட்சம் அதிகமாகும்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துபாய் மெட்ரோ ரெயில் சேவைப் பிரிவின் தற்காலிக செயல் இயக்குனர் அப்துல்லா யூசுப் அல் அலி கூறுகையில், ‘தெய்ரா சிட்டி செண்டர் நிலையம் வழியாக மட்டும் 1.84 மில்லியன் பேரும், புர்ஜ் கலிபா துபாய் மால் வழியாக 1.81 மில்லியன் பேரும் பயணித்துள்ளனர்.

துபாயில் வசிப்பவர்கள், சுற்றூலா பயணிகள் ஆகியோர் நகரின் முக்கியமான பகுதிகளுக்கு சிரமம் இல்லாத பயணம் மேற்கொள்வதற்கு ஏற்ற சிறந்த போக்குவரத்து சாதனமாக துபாய் மெட்ரோ ரெயில் சேவை திகழ்கிறது என்பதை இந்த பயணிகளின் அதிகரிப்பு உணர்த்துகிறது’ என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.