Header Ads



செல்ல நாயை மணந்த எஜமானி

லண்டனை சேர்ந்த, பெண், தான் வளர்த்த நாயை திருமணம் செய்து கொண்டுள்ளார். லண்டனை சேர்ந்தவர், அமண்டா ரோட்ஜர்ஸ், 47. இவர், 20 ஆண்டுகளுக்கு முன், ஒருவரை திருமணம் செய்தார். 

ஆனால், சில மாதங்களிலேயே, பல பிரச்னைகளால், இருவரும், பிரிந்தனர். அன்று முதல் தனிமையில் வாழ்ந்து வந்த அமண்டா, 'ஷீபா' என்ற, செல்ல நாயை வளர்த்து வருகிறார். குரோஷியா நாட்டின், ஸ்ப்லிட் நகரத்தில், 200 பேரின் முன்னிலையில், அமண்டாவுக்கும், மணப்பெண் உடையில் வந்த, ஷீபாவுக்கும் திருமணம் நடந்தது.

இதுகுறித்து, அமண்டா கூறியதாவது,

ஷீபாவிடம், நான் முட்டிப்போட்டு, காதலை தெரிவித்தேன்; வாலாட்டி, என் காதலை, அது ஏற்றுக் கொண்டது. நான் கவலையாக இருக்கும் போதெல்லாம், ஷீபா, என்னை சிரிக்க வைத்து, எனக்கு ஆறுதல் கூறும்; ஒரு கணவருக்கு இருக்க வேண்டிய குணங்களும் அதனிடம் இருக்கிறது. இந்த திருமணம் சட்ட ரீதியாக செல்லாது என்றாலும், ஷீபா எனக்கு முக்கியம்.இவ்வாறு அமண்டா கூறினார்.

1 comment:

  1. 10 madam kalitt 4kaloodu manida talayoodu oru adisaya pravi pirakka pokudu poruttu irungal

    ReplyDelete

Powered by Blogger.