Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பில் இந்தியத் துணைத் தூதுவர் மகாலிங்கத்திற்கு பிரியாவிடை (படங்கள்)


(பா.சிகான்)

இடமாற்றலாகி செல்லும் இந்தியத் துணைத் தூதுவர் வி.மகாலிங்கத்திற்கு   பிரியாவிடை நிகழ்வு  ஒன்றினை  யாழ் முஸ்லீம் மீள் குடியேற்றத்திற்கான சிவில் சமூக முன்னெடுப்பு அமைப்பு 08-03-2014 மாலை 3 மணியளவில் விடுதியொன்றில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்விற்கு  அவ்வமைப்பின் சார்பாக செயல்திட்ட முகாமையாளர் எம்.எம்.எம். அஜ்மல் மற்றும் ஆசிரியர் எம்.லாபீரும்  தலைமை தாங்கியிருந்தனர்.

இந் நிகழ்வில் வட சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்,  ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் , வட மாகாண சபை உறுப்பினர் அய்யுஸ்ரீப் அஸ்மீன் மற்றும் இந்திய  துணைத்தூதரக அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது தூதுவருக்கு அமைப்பின் சார்பில் ஞாபகசின்னம் வழங்கப்பட்டது.





No comments

Powered by Blogger.