மூதூர் இளம் பட்டதாரிகள் சங்கத்தினால் முன்னோடிப் பரீட்சை
(மூதூர் முறாசில்)
மூதூர் இளம் பட்டதாரிகள் சங்கத்தினால் க.பொ.த. உயர் தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி ஏற்பாடு செய்யப்பட்ட முன்னோடிப் பரீட்சை இன்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.
மூதூர் மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற இம்முன்னோடிப் பரீட்சையில் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மூதூர் பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு மூதூர் இளம் பட்டதாரிகள் சங்கமானது கல்விக் கருத்தரங்கு,முன்னோடி பரீட்சை முதலானவற்றை தொடர்ந்து நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.



Post a Comment