கல்முனை மத்தியஸ்தர்கள் குழுவின் தலைவரைத் தாக்கியவர் கைது
.jpg)
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனை மத்தியஸ்தர்கள் குழுவின் தலைவரைத் தாக்கிய நற்பிட்டிமுனையைச் சேர்ந்த ஒருவரை கல்முனைப்பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தகராரு காரணமாக கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த முறைப்பாடொன்றை மத்தியஸ்தர்கள் குழுவிற்கு பொலிஸார் அனுப்பிவைத்திருந்தனர். இதனை மத்தியஸ்தர்கள் குழு தலைவரின் தலைமையில் விசாரித்துக்கொண்டிருந்த போது அதன் தலைவருடன் முறன்பட்டுக்கொண்டது மட்டுமல்லாமல் அவரைத்தாக்கியதன் காரணமாக மத்தியஸ்தர்கள் குழுவின் தலைவர் பொரிஸாருக்குக்கொடுத்த முறைப்பாட்டையடுத்துஉரிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதன் பின்னர் பினையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment