மூத்த ஊடகவியலாளர் எம்.ஏ.ஸீ. மொஹமட் இன்று வெள்ளிக்கிழமை 28 ஆம் திகதி நடைபெற்ற வாகன விபத்தில் வபாத்தாகியுள்ளார்.
வபாத்தாகும் வரை தனது ஊடகப் பணியை தொடர்ந்த அவர், சிங்கள மொழியிலான செய்திகள் மற்றும் கட்டுரைகளை தமிழுக்கு மொழிபெயர்ப்பதில் திறமைமிக்கவர். தினக்குரல் பத்திரிகையில் ரமழான் சிந்தனைகளையும் வழங்கிவந்ததுடன், சிலகாலம் பாராளுமன்ற செய்தியாளராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment