Header Ads



முஸ்லிம் அமைச்சர்கள் வெட்கப்பட வேண்டும் - செந்தில் தொண்டமானின் நெத்தியடி பதில்

ஊவா மாகாணசபை அமைச்சர் செந்தில் தொண்டமான், நேற்று 25-02-2014 மாலை கொழும்பு ரமடா ஹோட்டலில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது, நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும், அதற்கு செந்தில் தொண்டமான் வழங்கிய பதில்களும் வருமாறு...

“ஆனாலும், கண்டியில் ஆதிக்கத்தில் இருக்கும் நீங்கள் முஸ்லிம் பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டபோது வாய் திறக்கவில்லையே?”

“முஸ்லிம் அமைச்சர்களே இவ்விடயத்தில் சும்மா இருக்கும்போது அவர்கள்தான் இதற்கு வெட்கப்பட வேண்டும். எங்களால் 3 லட்சம் உதவிசெய்ய முடியுமானால், அதுவும் மத்திய அரசின் நிதியிலிருந்து பெறப்பட்ட உதவியை வழங்க முடியுமானால் முஸ்லிம் அமைச்சர்களால் ஏன் அதனைப் பெற்றுக்கொடுக்க முடியாது. சமூகத்தில் இருக்கின்ற ஒருசில புல்லுருவிகளால் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றால், அரசில் நிதியின் மூலமாக நிவாரணம் வழங்க முடியும். தொடர்ந்த இந்த உதவிகளை பெற்றுவந்தால் மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்க முடியும். ஏனெனில், நஷ்டம் அரசாங்கத்திற்குதான்”

4 comments:

  1. தமிழன் ஒருக்காலும் திருந்தமாட்டான்

    ReplyDelete
  2. ஐயா! உண்மையை சொன்னீர்.இதைதான் நாங்களும் சொல்லுகிறோம்,அரசியல் அறிவோ,சட்ட அறிவோ இல்லாதவர்கள்தான் முஸ்லிம் அமைச்சர்கள்,உரோசமில்லாதவர்கள்,உணவில் உப்பில்லாமல் சாப்பிடுகிறார்கள்.

    ReplyDelete
  3. சுய நலத்துக்காக இனத்தை பழிகொடுக்கும் 'எமது தலைவர்கள்' குப்புறப் படுத்துத் தூங்கும்போது எமது மக்கள் எப்போதுதான் விழித்தெழப்போகிறார்களோ.........!! அந்த தலைவர்களுக்கு ஒரு பாடம் படிப்பிப்பதற்கு......??

    ReplyDelete

Powered by Blogger.