சாய்ந்தமருது முகத்துவாரம் தோணாவில் சடலம்
(எம்.வை.அமீர்)
சாய்ந்தமருது முகத்துவாரம் தோணாவில் இன்று காலை சடலம் ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. இது மூன்று தினங்களுக்கு முன்னர் தோணாவில் சவாரி செய்த போது குடை சாய்ந்த தோணியில் பயணம் செய்தவர்களில் ஒருவராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
தோணாவில் நீர் நிறைந்து இருந்ததால் அந்நீரை வெளியேற்ற முகத்துவாரம் வெட்டப்பட்டு நீர் வடிந்துள்ள நிலையிலேயே சடலம் கரை ஒதுங்கி உள்ளது. மேலதிக விசாரணைகளை கல்முனை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment