Header Ads



பணமிருந்தால் பைத்தியக்காரனும் சர்வதேச பாடசாலைகளை ஆரம்பிக்கலாம் - அத்துரலிய ரத்தின தேரர்

பணமிருந்தால் பைத்தியக்காரன் கூட நாட்டில் சர்வதேச பாடசாலைகளை ஆரம்பிக்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருப்பதாக ஜாதிக்க ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இதுகுறித்து உரையாற்றியுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மேல் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். இப்பாடசாலைகளை கண்காணிக்கவும் வரையறைகளை வகுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வக்கிரப் புத்தி கொண்டவர்களே இவ்வாறான பாடசாலைகளை ஆரம்பிக்கின்றனர். சில அடிப்படைவாத மதக் குழுக்களும் இவ்வாறான பாடசாலைகளை இயக்குகின்றன.

No comments

Powered by Blogger.