Header Ads



உலகிலுள்ள 500 கோடி மொபைல்போன்களை கண்காணிக்கும் வசதி அமெரிக்காவுக்கு உள்ளதாம்..!

உலகில் உள்ள 500 கோடிக்கும் அதிகமான மொபைல்போன்களை கண்காணிக்கும் வசதி அமெரிக்காவுக்கு உள்ளது என்றும், அதன்படி, பெரும்பாலான மொபைல்போன்களின் உரையாடல்கள் கண்காணிக்கப்படுகின்றன என்றும், வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

எட்வர்ட் ஸ்நோடென் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அப்பத்திரிகை, வெளிநாடு செல்லும் அமெரிக்கர்களின் மொபைல்போன்கள் கூட கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.