Header Ads



முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கருத்தரங்கு


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கருத்தரங்கு சிலாபம், கொட்டாரருமுல்லை அல் - ஹிரா மகா வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை (02) இடம்பெற்றது.

21ஆம் நூற்றாண்டில் ஊடகம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் சிலாபம் மற்றும் கொட்டாரருமுல்லை ஆகிய பிரதேசங்களிலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளை சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலர் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

பாடசாலை மாணவர்களுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் ஊடகம் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 42ஆவது கருத்தரங்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.