Header Ads



கிண்ணியா இஹ்ஸானியா மகளிர் வித்தியாலய அதிபருக்கு பிரியாவிடை


(ஜே.எம். இஸ்மத்) 

கிண்ணியா இஹ்ஸானியா மகளிர் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்ற எஸ்.ஏ.எம். பாருக் அவர்களை பிரியாவிடை வைபவம் புதிய அதிபர் திருமதி பரீனா றிஸ்வி தலைமையில் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று (2013.11.06) இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் எம். ஐ. சேகுஅலி கலந்து கொண்டார். 

34 வருடம் ஆசிரியர் சேவையில் 18 வருடங்கள் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிபருக்கு நினைவுச் சின்னத்தை புதிய அதிபர், பிரதி அதிபர் வழங்கி வைப்பதையும் அருகில் வலயக் கல்விப் பணிப்பாளரும் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளினால் பரிசுப் பொதிகள் வழங்குவதையும் அதிதிகளும்  மாணவிகளும் அமர்ந்திருப்பதையும் ஓய்வு பெற்ற அதிபருக்கு பொன்னாடை போர்த்துவதையும்  அதிகளளோடு வித்தியாலய ஆசிரியர் குழாமையும் படங்களில் காணலாம். 




No comments

Powered by Blogger.