மூதூர் பாத்திமா அப்துல் காதர் அல்-குர்ஆன் பாடசாலையில் ஒன்று கூடல்
(மூதூர் முறாசில்)
மூதூர் பாத்திமா அப்துல் காதர் அல்-குர்ஆன் இஸ்லாமிய கற்கைகள் பாடசாலையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கான ஒன்று கூடல் ஞாயிற்றுக் கிழமை இரவு மூதூர் பஸார் ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
பாடசாலையின் பொறுப்பாசிரியர் அஷ்ஷெய்க் மஹ்ரூப் ஹாபிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் நிலாம் ஹாபிஸ், அஷ்ஷெய்க் நளீம், அஷ்ஷெய்க் சனூஸ், பாடசாலையின் தலைவர் பொறியியலாளர் எம்.ஏ.சி.எம். ஜெஸீம், டாக்டர் எம்.ஏ.சி.எம் சமீம், பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களான எம்.ஏ.சி.எம். ஸியாம், ஏ.டபிள்யூ எம். ஹில்மி, எம். மஹ்பூல், அமீர் எஸ். ஹமீட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Post a Comment