Header Ads



கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வெள்ளிவிழாவில் சுகாதார அமைச்சர்

(யு.எம்.இஸ்ஹாக்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின்    25வது ஆண்டு வெள்ளிவிழா பொது வைபவம் டிசம்பர் மாதம் 14ஆந்  திகதி   நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன  பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த    சாலை 1988 ஆம் ஆண்டு அப்போதைய  முல்லை தீவு மாவட்ட அமைச்சராக இருந்த  முன்னாள் வர்த்தக வாணிப அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரினால்  பிரசவ விடுதியாக  ஆரம்பிக்கப்பட்டு  அமைச்சர் மன்சூரின் அழைப்பின் பேரில் 1988நவம்பர் 05ஆம் திகதி அப்போதைய சுகாதார அமைச்சர் ரேணுகா ஹேரதினால்  திறந்து வைக்கப் பட்டது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த    சாலை அபிவிருத்தி குழுவின் அங்கத்தவர்கள் முன்னாள் அமைச்சர்  கொண்டதற்கிணங்க  அவர் சுகாதார அமைச்சர் மைத்திரிபால  சிறி சேனாவை சந்தித்து  இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்கான நேர அனுமதியை பெற்றுக் கொடுத்துள்ளார் 

டிசம்பர் 14ஆம் திகதி நடை பெறவுள்ள இவ்விழாவில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த   வைத்தியசாலையின்      ஸ்தாபகரும்  கல்முனையில் கனவான் அரசியல் பணி செய்தவருமான  முன்னாள் அமைச்சர் மன்சூர் உட்பட  இந்த வைத்திய சாலை அபிவிருத்திக்கு அர்பணிப்பு செய்த அத்தனை பேரும்  பாராட்டப்படுவ தோடு நினைவு மலரும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த    சாலையின் வெள்ளி விழா வைபவத்தையொட்டி  வைத்திய சாலையின் உட்கட்டுமான  அபிவிருத்தி பண்கள்  வைத்திய சாலை அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.