மலாலாவின் புத்தகத்திற்கு தடை
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிறுமி மலாலா சமீபத்தில் எழுதிய புத்தகத்தை அந்நாட்டு தனியார் பள்ளிகளில் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் அனைத்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர் மிர்ஸா காஸிப் அலி வெளியிட்ட அறிக்கை:
"ஐ எம் மலாலா' என்ற அந்தப் புத்தகத்தில் பல சர்ச்சைக்குள்ளான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

Post a Comment