மூதூரில் வளர்ந்தோர்களுக்கான குர்ஆனியல் கற்கைப் பிரிவு, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
(மூதூர் முறாசில்)
மூதூர் அக்கரைச்சேனை முகைதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் வளர்ந்தோர்களுக்கான குர்ஆனியல் கற்கைப் பிரிவினால் நடாத்தப்பட்ட குர்ஆனியல் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 09-11-2013 சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.
பள்ளிவாசல் தலைவர் பீ.எம்.காலிதீன் தலைமையில் முகைதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நத்வதுல் உலமா அரபுக்கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.கரீம் நத்வி, மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஜவாத் நளிமி,உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.றமீம்,அதிபர் கே.றமீஸ், அஷ்ஷெய்க் நிலாம் ஹாபிஸ், அஷ்ஷெய்க் மஹ்ரூப் ஹாபிஸ் அஷ்ஷெய்க் எ.டபிள்யூ.எம்.றிஸாத் நத்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது குர்ஆனியல் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ் வழங்கப்பட்டதோடு பயிற்சி நெறியின் பிரதம வளவாளரான அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். சலீத் நத்விக்கு வளர்ந்தோர்களுக்கான குர்ஆனியல் கற்கைப் பிரிவினால் விசேட பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.




Post a Comment