எகிப்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டது
எகிப்து நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டது. இதற்கான உத்தரவி எகிப்தின் நிர்வாக நீதிமன்றம் நேற்று வெளியிட்டது.
இந்த நீதிமன்ற ஆணைபடி, நேற்று மாலை 4 மணி முதல், எகிப்திலுள்ள அவசர நிலை நீக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் நடைமுறையான ஊரடங்கும் நீக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எகிப்தின் தற்காலிக அரசுத் தலைவர் அத்லி மான்சோர் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment