51 இட்சத்துக்கு விற்பனை செய்யப்படும் கற்பு - தடுத்துநிறுத்த பொலிஸாருக்கு முடியவில்லையாம்..!
ரஷ்யாவில் இளம்பெண் ஒருவர் தனது கன்னித்தன்மையை ஆன்லைன் மூலமாக ஏலத்தில் விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து ரஷ்யாவில் இருந்து வெளியாகும் சைபீரியன் டைம்ஸ் இதழில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது:ரஷ்யாவை சேர்ந்த சாதுனிகா என்ற பெண், பொருட்களை ஏலம் விடும் வலை தளம் ஒன்றில் ‘புதியது, முதல் முறையாக விற்பனைக்கானது’ என்ற பிரிவின் கீழ் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எனவே நான் எனது கன்னித்தன்மையை விற்பனை செய்ய தயாராக உள்ளேன். அதிக ஏலத்தில் எடுப்பவர்களுக்கு கன்னித் தன்மையை தர தயாராக இருக்கிறேன். இதற்கான மருத்துவ ஆவணங்களையும் பணத்தை நேரில் கொடுக்கும் போது காட்டுவேன்.
ஏலத்தில் எடுப்பவர் என்னை பிரத்மோஸ்னியா சதுக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நாளை என்னை சந்திக்கலாம். அப்போது எனது கன்னித்தன்மையை பரிசோதித்த மருத்துவ சான்றிதழ்களையும் கொண்டு வருகிறேன். ஏலத்தில் வெற்றி பெற்றவர் யாராயினும் ரொக்க பணமாகவே கொண்டு வந்து தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதை பார்த்த பலர் ஆன்லைன் ஏலத்தில் பங்கேற்றனர். பின்னர் எவ்கெனி வோல்னோவ் என்பவர் ரூ.51 லட்சத்துக்கு, இளம்பெண்ணின் கன்னித் தன்மையை ஏலம் எடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து போலீசார் கூறுகையில், Ôகன்னித்தன்மை ஏலம் விடுவதை சட்டரீதியாக தடுத்து நிறுத்த வழியில்லை. இது ஒரு நிர்வாக ரீதியான பிரச்னை. இதை குற்றமாக கருத முடியாது. மேலும் அவர்களை கண்டுபிடிக்கவும் இயலாதுÕ என்றனர்.

நபி (ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்பே இவ்வாறான கெட்டவர்களின் தோற்றம் பற்றிக் கூறிவிட்டார்கள்:
ReplyDelete''மறுமை நாளின் அடையாளங்களில் உள்ளவைதான்: அறிவு குறைவது, அறியாமை பகிரங்கமாகுவது, விபச்சாரம் பகிரங்கமாக நடப்பது, பெண்கள் அதிகரிப்பது, 50 பெண்களுக்கு ஒரு ஆண் என்ற வகையில் ஆண்கள் குறைவடைவது''' (நூல்: புகாரி)
விபச்சாரம் தலைவிரித்து ஆடுது ரசூளுல்லாட ஹதிசல்லாம் உண்மையாகிக்கொண்டு போகுது கியாமநாள் நேரிங்கி விட்டதுபொல்தரிகிரது allah nam allorayum விபச்சரத்த விட்டும் பாதுகாப்பானாக ஆமீன்
ReplyDelete