வாஸ் குணவர்த்தனவிற்கு எதிராக மற்றுமொரு வழக்கு
(Tm) முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவிற்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என சட்டமா அதிபர் மேன் முறையீட்டு நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை அறிவித்தார்.
மாலபே தனியார் பல்கலைக்கழக மாணவன் நிபுண ராமணாயக்கவை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியமைக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என சட்டமா அதிபர் தெரிவித்தார்.
வாஸ் குனவர்த்தனவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்துமாறு கோரி நிபுண ராமணாயக்க மற்றும் அவரது தாயார் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைகளின்போதே சட்டமா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Post a Comment