Header Ads



சூதாட்டத்தில் எப்படி வெற்றிபெறுவது? - மேர்வின் சில்வா ஐடியா சொல்கிறார்..!

அரசாங்கத்தின் அண்மைய அமைச்சரவைக் கூட்டத்தில் உத்தேச கசினோ சூதாட்ட சட்டமூலம் தொடர்பாகவே அதிக நேரம் கலந்துரையாடப்பட்டது.
தான் கசினோ விளையாடியுள்ளதாகவும் அதில் எந்த தவறும் இல்லை என்றும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கூறினார்.

அதேவேளை கசினோ விளையாடினால் என்ன தவறு.... மரண வீடுகளில் நடக்கும் சீட்டாட்டதை எம்மால் இன்னும் நிறுத்த முடியவில்லேயே என்று அமைச்சர் விஜித முனி சொய்சா குறிப்பிட்டார்.

இதன் பின்னர் அமைச்சர்கள் ஜகத் புஷ்பகுமார, மகிந்த அமரவீர, மேர்வின் சில்வா போன்ற அமைச்சர்களும் கசினோவுக்கு ஆதரவாக பேசினர்.

இங்கு பேசிய அமைச்சர் மேர்வின் சில்வா சூதாட்டத்தில் வெல்வது எப்படி என்று விபரித்தார்.

1971ம் ஆண்டு நான் பெலியத்தயில் இருந்து கொழும்புக்கு வந்த காலத்தில் கொழும்பில் சூதாட்டம் இருந்தது.

அந்த காலத்தில் 5 சதத்திற்கு பந்தயம் வைத்து சூதாடும் முறையே இருந்தது. சூதாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 5 சதத்தை கையில் வைத்து கொண்டு ஈக்கள் மொய்க்கும் வரை காத்து கொண்டிருப்பார்கள்.

முதலில் எவரது பணத்தில் ஈ மொய்கின்றதோ அவரே வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்படும். இதனால் நான் அந்த காலத்தில் 5 சதத்தை என் பின் பகுதியில் தேய்த்து வைத்து கொள்வேன்.

இதனால் முதலில் எனது 5 சதத்திலேயே முதலில் ஈ மொய்க்கும். நான் 5 சதத்தை எனது கைகளினால் மூடி நானே ஆட்டத்தில் வெற்றி பெறுவேன் என மேர்வின் சில்வா குறிப்பிட்டார்.

3 comments:

  1. இப்போதும் அந்த பீ நாதத்தில் தானே ஒங்க வாழ்கை ஓடுது அமைச்சரே . என்ன ஒரே ஒரு வித்தியாசம் , அப்போ ஒன்குட சொந்த பீய களுவி நீர்கள் , இப்போ ராஜபக்சே and கம்பெனி பீய கழுவுரீர்கள்... . சும்மா சொல்ல போடாது , இத பத்தி நாடாளு மன்றத்தில் பெருமையா பேச்சு வேற

    ReplyDelete
  2. maanag ketta ilangai amaicherkal

    ReplyDelete
  3. உள்ளம் உண்டு உணர்வு இல்லை என்று அல்லாஹ் குரானில் சொல்வது சரிதான்

    ReplyDelete

Powered by Blogger.