இலங்கையர்களை எதிர்பார்க்கும் தாய்வான்
(sfm) தாய்வான் அரசாங்கம் இலங்கையில் இருந்து பணியாளர்களை எதிர்ப்பார்ப்பதாக தெ சைனா போஸ்ட் செய்திதாள் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தாய்வானின் நிறுவனங்கள் அடுத்த ஆண்டில் இலங்கையில் இருந்து பணியாளர்களை எதிர்ப்பார்ப்பதாக சைனா போஸ்ட் தெரிவித்துள்ளது.
இதற்கு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான விசா உட்பட்ட பல தடைகள் நிவர்த்தி செய்யப்படவுள்ளதாகவும் அந்த செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.
தாய்வானில் தற்போது பிலிப்பைன்ஸ் தாய்லாந்து போன்ற நாடுகளின் பணியாளர்களை பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் 4 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டவர்களுக்கு தாய்வானில் வேலைவாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment